![]() |
Webpages of Tamil Electronic Library © K. Kalyanasundaram A Collection of small but popular didactic Tamil verses
|
|
A Collection of small but popular didactic Tamil verses for Children : AtticuTi, kondrei vEntan, mUturai & nalvazi (in Tamil Unicode format) ஆத்திசூடி ( ஆசிரியர்: ஒளவையார் )ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம் 3. இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல் 5. உடையது விளம்பேல் 6. ஊக்கமது கைவிடேல் 7. எண்ணெழுத்து இகழேல் 8. ஏற்பது இகழ்ச்சி 9. ஐயம் இட்டு உண் 10. ஒப்பூரவு ஒழுகு 11. ஓதுவது ஒழியேல் 12. ஒளவியம் பேசேல் 13. அ·கம் சுருக்கேல் உயிர்மெய் வருக்கம் 14. கண்டொன்று சொல் லேல் 15. ஙப்போல் வளை 16. சனி நீராடு 17. ஞயம்பட உரை 18. இடம்பட வீடு எடல் 19. இணக்கம் அறிந்து இணங்கு 20. தந்தை தாய்ப் பேண் 21. நன்றி மறவேல் 22. பருவத்தே பயிர் செய் 23. மண் பறித்து உண்ணேல் 24. இயல்பு அலாதன செயேல் 25. அரவம் ஆட்டேல் 26. இலவம் பஞ்சில் துயில் 27. வஞ்சகம் பேசேல் 28. அழகு அலாதன செயேல் 29. இளமையிற் கல் 30. அறனை மறவேல் 31. அனந்தல் ஆடேல் ககர வருக்கம் 32. கடிவது மற 33. காப்பது விரதம் 34. கிழமைப்பட வாழ் 35. கீழ்மை அகற்று 36. குணமது கைவிடேல் 37. கூடிப் பிரியேல் 38. கெடுப்பது ஒழி 39. கேள்வி முயல் 40. கைவினை கரவேல் 41. கொள்ளை விரும்பேல் 42. கோதாட்டு ஒழி 43. கெளவை அகற்றுசகர வருக்கம் 44. சக்கர நெறி நில் 45. சான்றோர் இனத்து இரு 46. சித்திரம் பேசேல் 47. சீர்மை மறவேல் 48. சுளிக்கச் சொல்லேல் 49. சூது விரும்பேல் 50. செய்வன திருந்தச் செய் 51. சேரிடம் அறிந்து சேர் 52. சையெனத் திரியேல் 53. சொற் சோர்வு படேல் 54. சோம்பித் திரியேல் தகர வருக்கம் 55. தக்கோன் எனத் திரி 56. தானமது விரும்பு 57. திருமாலுக்கு அடிமை செய் 58. தீவினை அகற்று 59. துன்பத்திற்கு இடம் கொடேல் 60. து¡க்கி வினை செய் 61. தெய்வம் இகழேல் 62. தேசத்தோடு ஒட்டி வாழ் 63. தையல் சொல் கேளேல் 64. தொன்மை மறவேல் 65. தோற்பன தொடரேல் நகர வருக்கம் 66. நன்மை கடைப் பிடி 67. நாடு ஒப்பன செய் 68. நிலையில் பிரியேல் 69. நீர் விளையாடேல் 70. நுண்மை நுகரேல் 71. நு¡ல் பல கல் 72. நெற்பயிர் விளைவு செய் 73. நேர்பட ஒழுகு 74. நைவினை நணுகேல் 75. நொய்ய உரையேல் 76. நோய்க்கு இடங் கொடேல் பகர வருக்கம் 77. பழிப்பன பகரேல் 78. பாம்பொடு பழகேல் 79. பிழைபடச் சொல்லேல் 80. பீடு பெற நில் 81. ப 82. பூமி திருந்தி உண் 83. பெரியாரைத் துணைக் கொள் 84. பேதைமை அகற்று 85. பையலோடு இணங்கேல் 86. பொருள்தனைப் போற்றி வாழ் 87. போர்த் தொழில் பூரியேல் மகர வருக்கம் 88. மனம் தடுமாறேல் 89. மாற்றானுக்கு இடங் கொடேல் 90. மிகைபடச் சொல்லேல் 91. மீது¡ண் விரும்பேல் 92. முனைமுகத்து நில்லேல் 93. மூர்க்கரோடு இணங்கேல் 94. மெல்லி நல்லாள் தோள்சேர் 95. மேன்மக்கள் சொற் கேள் 96. மை விழியார் மனை அகல் 97. மொழிவது அறமொழி 98. மோகத்தை முனி வகர வருக்கம் 99. வல்லமை பேசேல் 100. வாது முற்கூறேல் 101. வித்தை விரும்பு 102. வீடுபெற நில் 103. உத்தமனாய் இரு 104. ஊருடன் கூடி வாழ் 105. வெட்டெனப் பேசேல் 106. வேண்டி வினை செயேல் 107. வைகறைத் துயில் எழு 108. ஒன்னாரத் தேறேல் 109. ஓரம் சொல்லேல் கொன்றை வேந்தன் ( ஆசிரியர்: ஒளவையார் )கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தரும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழகு 13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு ககர வருக்கம் 14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை 15. காவல்தானே பாவையர்க்கு அழகு 16. கிட்டாதியன் வெட்டன மற 17. கீழோராயினும் தாழ உரை 18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 19. கூர் அம்பாயினும் வீரியம் பேசேல் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை 22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி 24. கோட்செவிக் குறமை காற்றுடன் நெருப்ப 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை சகர வருக்கம் 26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு 28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு 30. சுற்றத்திற்கு அழகு சூழ விருந்தல் 31. சூதும் வாதும் வேதனை செய்யும் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும் 33. சேமம் ப 34. சையத்திருந்தால் ஐயம் இட்டு உண் 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் தகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை 39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு 40. தீராக் கோபம் போர முடியும் 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு 42. து¡ற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் 44. தேடாது அழிக்கின் பாடா முடியும் 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு 46. தொழுது¡ண் சுவையின் உழுது¡ண் இனிது 47. தோழனோடும் ஏழைமை பேசேல் நகர வருக்கம் 48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும் 49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை 50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை 51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு 52. நுண்ணிய கருமம் எண்ணித் துணி 53. நு¡ல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு 54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை 55. நேரா நோன்பு சீராகாது 56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் 57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் 58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை பகர வருக்கம் 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் 61. பிறன் மான புகாமை அறம் எனத் தகும் 62. பீரம் பேணி பாரம் தாங்கும் 63. புலையும் கொலையும் களவும் தவிர் 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் 65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் 67. பையச் சென்றால் வையம் தாங்கும் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் 69. போகனம் என்பது தான் உழந்து உண்டல் மகர வருக்கம் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் 71. மாரி அல்லது காரியம் இல்லை 72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையு ம் 75. மூத்தோர் சொல் வார்த்ரை அமிர்தம் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு 77. மேழிச் செல்வம் கோழை படாது 78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் 80. மோனம் என்பது ஞான வரம்பு வகர வருக்கம் 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண் 82. வானம் கருக்கின் தானம் சுருங்கும் 83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் 84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும் 85. உரவோர் என்கை இரவாது இருத்தல் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை 88. வேந்தன் சீறின் ஆம்ருணை இல்லை 89. வையந் தோறும் தெய்வந் தொழு 90. ஒத்த இடத்து நித்திரை செய் 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம் உலக நீதி ( ஆசிரியர்: உலகநாதர் )ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே #2 நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #3 மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம் வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #4 குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #5 வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #6 வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன் திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே #7 கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம் பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே #8 சேராத இடம் தனிலே சேர வேண்டாம் செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம் வாராரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #9 மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம் கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம் புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #10 மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம் திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே #11 அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய் தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை ஏதெது செய்வானோ ஏமன்றானே #12 கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம் கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம் வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம் மாறான குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே #13 ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப் பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே முதுரை ( ஆசிரியர்: ஒளவையார் )கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. #1. நன் றி ஒருவற்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கோல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். #2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் ஒழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் ஒழுத்துக்கு நேர். #3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனிமையவும் -இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு . #4. அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். #5. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. #6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்று¡ண் பிளந்திறுவ நல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான் . #7. நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்று நு¡லளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்தளவே ஆகுமாம் குணம். #8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று . #9. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. #10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிக் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. #11. பண்டு முளைப்ப தரிசியே ஆனாலும் விண்டும் போனாள் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்(கு) ஆகா தளவின்றி ஏற்ற கருமம் செயல். #12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்று¡றல் உண்ணீரும் ஆகி விடும். #13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - ஈவைநடுவே நீட்டோவை வாரியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம், #14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. #15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம். #16. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலைவில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. #17. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு . #18. சீர்¢யர் கெட்டாலும் சீரியரே சீரயேர்மற்(று) அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும் - சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால். #19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன். #20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்தே போல்வாரும் உண்டு. #21. இல்லாள் அகத்திருக்க இல்லாத(து) ஒன்றில்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த து¡றாய் விடும் . #22. எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈதேதல் முற்பவத்திற் செய்த வினை. #23. கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம் . #24. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தார்ப்போல் கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா முர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். #25. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துரையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். #26. மன்னனும் மாசற்க் கற்றோனும் சீர்து¡க்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்¡ல கற்றோற்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. #27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம் அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற்(கு) இசைந்தொழுகாப் பெண். #28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா(து) ஆதலால் - தம்தம் தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம்சிறியர் ஆவரோ மற்று. #29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை ஆகும்போ(து) அவளோடும் ஆகும் அவள்பிரிந்து போம்போ(து) அவளோடு போம் . #30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். நல்வழி ( ஆசிரியர்: ஒளவையார் )பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து து¡மணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா #1. புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல். #2. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட் டாங்கில் உள்ள படி . #3. இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக உண்டாயின் உண்டாகும் ஊழல் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. #4. எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லால் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. #5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்திவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்து¡ரம் தாம்நி¨ந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். #6. உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்க்கம் கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக் கடலோடி மீண்டும் கரையேரி னால்என் உடலோடு வாழும் உயிர்க்கு. #7. எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல் நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. #8. ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் - கேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். #9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று( ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. #10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென்(று) இட்டுண் டிரும் . #11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அறிது. #12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. #13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்பவர் - ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்அம் புவியதன் மேல். #14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கள் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச் சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர்விடுகை சால உறும். #15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத அல்லாம் மிதியே மதியாய் விடும். #16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. #17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவம் என்னஅறிந்(து) அன்றிடார்க்(கு) இன்று வெறும்பானை பொங்குமோ மேல். #18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் எனவேண்டா - மற்றோர் இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலும் தாம் . #19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். 20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும் கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும்.0 21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும் தரும்சிவந்த தாமரையாள் தான். 22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு) ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் . 23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை . 24. நீறில்லா நெற் றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை . #25. ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. #26. மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனில் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம். #27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் . #28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன = கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். #29. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - கரந்தமுதம் கற்றா தால்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர் . #30. தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார் பு ந்தா மரைபோல் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமே விதி. #31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ் சாத் தாரத்தின் நன்று தனி . #32. ஆறிடும் வேவும் மடுகும்போல் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. #33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திப் பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தில் வேருக்கு நெக்கு விடும். #34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாரும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா(து) அவன்வாயிற் சொல். #35. பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - து¡வா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. #36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடீ போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல் மாதர்மேல் வைப்பார் மனம். #37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நு¡லகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே விண்ணுறுவார்க் கில்லை விதி. #38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். #39. முப்பதால் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு . #40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவு ம் முவர் தமிழும் முனிமொழியு ம் - கோவை திருவா சகமும் தி முலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். |
|