Tamil Songs for small children
Posted By kalyan on April 8, 2008
தமிழ் பாப்பா பாடல்கள்
Source:
http://tamilparks.tripod.com/tamilbabysongs/amma.html
நிலா
நிலா நிலா ஓடி வா
நிலாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட அட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா
——-
அம்மா
அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருனை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்.
——-
குள்ள வாத்து
குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து
———
சின்னப் பூனை
சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப் பாயும் பூனையாம்
கன்னங்கரியப் பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்
—
மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்
— அழ வள்ளியப்பா
—-
தோசை
தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ண்னுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஓன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்
——
பொம்மை
பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்கு கிடைத்த பொம்மை போல்
ஏதும் இல்லை உலகிலே
— தணிகை உலகநதன
—-
நாய்க்குட்டி
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டி பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி
—
அணில்
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்
—
பம்பரம்
சின்ன சின்ன பம்பரம்
வண்ண வண்ண பம்பரம்
கன்னம் போல மின்னுதே
கடைந்த இந்த பம்பரம்
சாட்டை சுற்றி வீசினேன்
சுழன்று என்னை கவர்ந்ததே
— அன்பு சி. நடராசன்
—

Comments
Leave a Reply
Please note: Comment moderation is currently enabled so there will be a delay between when you post your comment and when it shows up. Patience is a virtue; there is no need to re-submit your comment.
You must be logged in to post a comment.